×

காட்பாடியில் முன்னாள் ராணுவ வீரர்கள் கோல்டன் ஜூப்ளி விழா

கண்ணமங்கலம், ஜன.23: காட்பாடியில் முன்னாள் ராணுவ வீரர்கள் கோல்டன் ஜூப்ளி விழா நடந்தது. வேலூர் மாவட்டம், காட்பாடி கோபாலபுரத்தில் நேற்று முன்தினம், 1970ம் ஆண்டில் பணிபுரிந்த முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் 50ம் ஆண்டு கோல்டன் ஜூப்ளி விழா நடந்தது. விழாவுக்கு, முன்னாள் ராணுவ வீரர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். மேஜர் விஜயகுமார், கேப்டன் அண்ணாமலை முன்னிலை வகித்தனர். கேப்டன் விஸ்வநாதன் வரவேற்றார்.இதில் 1970ம் ஆண்டு மெட்ராஸ் என்ஜீனியரிங் குரூப் 70வது பாய்ஸ் பிளாட்டூனில் பணிபுரிந்த முன்னாள் ராணுவ வீரர் சாமிதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கினார். மேலும், 1970ம் ஆண்டு முதல் 2020 வரையில் உள்ள முன்னாள், இந்நாள் வீரர்கள், தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர். ஆரம்ப காலத்தில் இருந்த பாய்ஸ் பிளாட்டூன் தற்போது இல்லை என்பதையும், பாகிஸ்தான், சீனா போரில் தங்கள் பங்களிப்பையும், தங்களுடன் இருந்த வீரர்களின் உயிர் தியாகத்தையும் நினைவு கூர்ந்தனர். 50 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திப்பதை நினைத்து அனைவரும் கண் கலங்கினர். தொடர்ந்து, அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டு, நினைவு படம் எடுத்து கொண்டனர்.

Tags : Golden Jubilee Festival ,Katpadi ,
× RELATED டாஸ்மாக் பார் அருகே பிளாக்கில் விற்க...