×

ஆரணி நகராட்சியில் ₹12.50 லட்சம் மதிப்பில் கால்வாய் தூர்வார புதிய இயந்திரம்

ஆரணி, ஜன.23: ஆரணி நகராட்சியில் ₹12.50 லட்சம் மதிப்பில் கால்வாய் தூர்வார புதிய இயந்திரத்தை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேற்று தொடங்கி வைத்தார்.ஆரணி நகராட்சியில் கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள், கால்வாய்களை முழுமையாக தூர்வார கால்வாய் தூர்வாரும் இயந்திரம் வழங்க வேண்டும் என நகராட்சியினர் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தனர்.அதன்பேரில், ஆரணி சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ₹12.50 லட்சத்தில் கால்வாய் தூர்வாரும் புதிய இயந்திரம் வாங்கப்பட்டு, நகராட்சி நிர்வாகத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. அப்போது ஆரணி காந்தி சாலையில் உள்ள கால்வாயை புதிய இயந்திரத்திற்கு பூஜை செய்து தூர்வாரும் பணியை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில், நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், பொறியாளர் கணேசன், உதவி செயற்பொறியாளர் சோபனா, இளநிலை பொறியாளர் சவரணன், மேற்பார்வையாளர் சண்முகம், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் ஜோதிலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : municipality ,Arany ,
× RELATED திருப்பத்தூர் நகராட்சியில் பரபரப்பு...