×

விதை சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணியை ஆட்சியர் ஆய்வு

ரிஷிவந்தியம், ஜன. 23:ரிஷிவந்தியம் அருகே சுத்தமலை ஊராட்சியில் விதை சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா ஆய்வு செய்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் சுத்தமலை ஊராட்சியில் விதை சுத்திகரிப்பு நிலைய புதிய கட்டிடத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விதை சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிக்கு ரூ.30 லட்சமும், இயந்திரங்களும் ரூ.23 லட்சமும், உலர் களத்திற்கு ரூ.7 லட்சமும் என மொத்தம் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.இப்பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா ஆய்வு செய்தார். ஆய்வின்போது கட்டுமானப் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என பொறியாளர்களிடம்  அறிவுறுத்தினார். மேலும் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டுமென ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் கிரண்குராலா உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆய்வின்போது அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

Tags : Collector ,seed purification plant ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...