புதுச்சேரி, ஜன. 23: புதுச்சேரி, சிருங்கேரி மடம் எதிரே பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பொறியியல் பட்டதாரி பாிதாபமாக இறந்தார். புதுச்சேரி வில்லியனூர் ஒதியம்பட்டு பள்ளிக்கூட தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் சபரிநாதன் (23). பொறியியல் பட்டதாரியான இவர், 100 அடி ரோடு கொக்கு பார்க் அருகிலுள்ள ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பயிற்சி ஊழியராக பணியாற்றி வந்தார். இதற்காக நேற்று அதிகாலை 5.45 மணியளவில் வீட்டிலிருந்து வழக்கம்போல் தனது பைக்கில் சபரிநாதன் வேலைக்கு புறப்பட்டு வந்தார். அவர் மரப்பாலம் வழியாக இந்திராகாந்தி சிக்னலை கடந்து முருகா தியேட்டர் நோக்கி வேகமாக வந்த நிலையில், அவருக்கு பின்னால் புதுவையில் இருந்து சென்னை நோக்கி வந்த தமிழக அரசு பேருந்து சிருங்கேரி மடம் எதிரே வலதுபுறமாக அவரை கடந்துள்ளது.