சீன சர்வதேச திறன் போட்டியில் பங்கேற்போருக்கான முன்தேர்வு

திருச்சி, ஜன.22: சீனாவில் நடைபெற உள்ள சர்வதேச திறன் போட்டிகளில் பங்கேற்க இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் 2021 செப்டம்பர் மாதம் சர்வதேச திறன் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டியில் பங்கேற்க ஏதுவாக தொடக்க நிலையில் மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க முன்தேர்வுகள் நேற்று முன்தினம் துவங்கியது. இன்று வரை இத்தேர்வு நடக்கிறது. இது தொடர்பான விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு கடிதங்கள், மின்னஞ்சல் (இ-மெயில்) மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்தேர்வில் தேர்வு செய்யப்படுபவர்கள் ஜனவரி 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். எனவே விண்ணப்பதாரர்கள் அனைவரும் முன்தேர்வில் தவறாது கலந்துகொள்ள வேண்டும். இத்தகவலை திருச்சி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: