இன்று நிறைவு 24ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி, ஜன.22: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 24ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் ஜன.24ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார் துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன. முகாமில் 10ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் (வயது: 18-35) கலந்துகொள்ளலாம். இதில் பங்கேற்க விரும்புவோர் அசல், நகல் சான்றுகளுடன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் பங்கேற்க வேண்டும். இத்தகவலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Related Stories: