×

கல்லூரி மாணவர்களை மிரட்டி செல்போன், லேப்டாப் பறிப்பு

திருச்சி, ஜன. 22: நடந்து சென்ற கல்லூரி மாணவர்களை மிரட்டி செல்போன், லேப்டாப்பை பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் பறித்து சென்றனர். தமிழகத்தில் பொங்கல் பண்டிக்கைக்காக கடந்த 14ம் தேதி 19ம் தேதி தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதையடுத்து வெளியூர்களில் பணியில் இருந்தவர்கள் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். தொடர்ந்து 19ம் தேதி விடுமுறை முடிந்து சொந்த ஊர் திரும்பினர். இதில் திருச்சி அருகே துவாக்குடியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருபவர்கள் கார்த்திக். இவரது சொந்த ஊர் சென்னை. இவரது நண்பர் வடமாநிலத்தை சேர்ந்தவர் தருண். இருவரும் வகுப்பு தோழர்கள். இதில் பொங்கல் கொண்டாடுதற்காக தருணை அழைத்துக்கொண்டு கார்த்திக் சென்னை சென்றார். பொங்கல் கொண்டாடிவிட்டு நேற்று முன்தினம் அதிகாலை திருச்சி திரும்பினர். பஸ்சில் வந்த இருவரும் பழைய பால்பண்ணை அருகே இறங்கி ஆட்டோ பிடிப்பதற்காக நடந்து சென்றனர். அப்போது பைக்கில் வந்த 3 பேர், கார்த்திக், தருணை மிரட்டி இருவரும் வைத்திருந்த 3 செல்போன்கள், லேப்டாப் இருந்த பேக் ஆகியவற்றை பறித்து சென்றனர். இது குறித்து காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : College students ,
× RELATED ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம்...