காயமடைந்த முதியவர் சாவு

திருவெறும்பூர், ஜன.22: திருவெறும்பூர் அருகே பொங்கல் பரிசு வாங்க சென்றபோது டூவீலர் மோதி பலத்த காயம் அடைந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பலனின்றி இறந்தார். திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார்பாளையம் மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் யாக்கோப்(80). இவர் தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கிய இலவச பரிசு பொருட்களை வாங்குவதற்காக கடந்த 9ம் தேதி ரேஷன் கடைக்கு சென்றபோது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த யாகோப்பை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு யாக்கோப் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: