மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி, ஜன. 22: திருச்சி மேலசிந்தாமணி காவேரி நகரை சேர்ந்தவர் குணசேகரன். மாநகராட்சியில் பிளம்பராக உள்ளார். இவரது மனைவி ரேவதி (43). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் கடந்த சில மாதங்களாக ரேவதி முதுகு வலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் பலனில்லை. இந்நிலையில் நேற்றும் முதுகுவலி வந்ததையடுத்து வெறுப்படைந்த ரேவதி, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதில் மதிய சாப்பாட்டிற்காக கணவர் குணசேகரன் வந்த போது, வீடு உள்தாழ் போடப்பட்டிருந்தது. கதவை தட்டியும் திறக்கப்படாததால் ஜன்னல் வழியே பார்த்தபோது ரேவதி தூக்கில் தொங்குவது தெரியவந்தது.இது குறித்த புகாரின் பேரில் அங்கு வந்த கோட்டை எஸ்ஐ கீதா கதவை உடைத்து ரேவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகிறார்.

Related Stories: