மது பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றவர் கைது 45 பாட்டில்கள் பறிமுதல்

திருவெறும்பூர், ஜன. 22: திருவெறும்பூர் அருகே கள்ளச்சந்தையில் மதுபான பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றவரை போலீசார் கைது செய்தனர். திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சின்ன டைட் (எ) கணேசன்(42). இவர் காட்டூர் மஞ்சத் திடல் பாலம் பகுதியில் அரசு மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு கள்ள சந்தையில் விற்று வந்துள்ளார். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் சப்.இன்ஸ்பெக்டர் நாகராஜனுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நாகராஜன் தலைமையிலான போலீசார் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு அரசு மதுபான பாட்டில்களை விற்றுக் கொண்டிருந்த கணேசனை வழக்குப்பதிந்து கைது செய்து செய்தனர். மேலும் கணேசனிடம் இருந்து 45 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: