×

வாலிபர் மீது தாக்குதல் 5 பேர் கைது

சிவகாசி, ஜன.22: சிவகாசி அருகே உள்ள போஸ் காலனியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன் (24), லோடுமேன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வபாண்டிக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து செல்வபாண்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் விக்னேஷ், கார்த்தி, வைரவேல்பாண்டி, கணேசன், அஜித், சூர்ய பிரகாஷ் ஆகியோர் மாரீஸ்வனை அரிவாளால் தாக்கினர். சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்து , செல்வபாண்டி, வைரவேல்பாண்டியை தேடி வருகிறார்கள்.வாலிபர் கால்கள்நசுங்கினசிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியை சேர்ந்தவர் வைரமுத்து (18). இவர், திருவில்லிபுத்துாரிலிருந்து சிவகாசி வந்த டவுன் பஸ்சில் ரிசர்வ்லைன் பஸ்ஸ்டாப்பில் ஏறிய பொழுது, பஸ்புறப்பட்டதால் வைரமுத்து தவறி கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் சக்கரம் வைரமுத்துவின் கால்களில் ஏறி இறங்கியதில் 2 கால்களும் நசுங்கின. பஸ் டிரைவர் ரெங்கசாமி, நடத்துனர் பாலச்சந்திரன் மீது சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பட்டாசு தொழிலாளிதற்கொலைசிவகாசி அருகே ஆண்டியாபுரத்தை சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளி கருத்தப்பாண்டி (27). வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை