×

குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் திருவில்லி.யில் பரபரப்பு

திருவில்லிபுத்தூர், ஜன. 22:திருவில்லிபுத்தூரில் குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவில்லிபுத்தூரில் உள்ள ரைட்டன்பட்டி தெருவில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இரவு நேரங்களில் குப்பைகளை கொட்டி தீ வைத்துவிட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு, காற்று மாசுபாடு ஏற்பட்டு வருகிறது. மேலும், இப்பகுதியில் உள்ள ஒரு சிலர் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், குப்பையை அகற்றக் கோரியும், நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரியும் 50க்கும் மேற்பட்டோர் நேற்று திடீரென திருவில்லிபுத்தூர்-திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த திருவில்லிபுத்தூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.பின்னர் அங்கிருந்த குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

Tags :
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...