×

மாவட்டத்தில் 10 இடங்களில் நெல் கொள்முதல் மையம் நாளை திறப்பு கலெக்டர் அறிவிப்பு

விருதுநகர், ஜன. 22: விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் வெளியிட்டுள்ள தகவல்: மாவட்டத்தில் 2019-20 காரீப் பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல் நேரடியாக கொள்முதல் செய்ய நாளை (ஜன.23) முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.ராஜபாளையம் வட்டம் சேத்தூர், தேவதானம், வத்திராயிருப்பு வட்டம் ராமசாமியாபுரம், கான்சாபுரம், காரியாபட்டி வட்டம் செவல்பட்டி, திருச்சுழி வட்டம் நொச்சிகுளம், நாலூர், உலக்குடி, டி.வேலங்குடி மற்றும் வேளாநேரி ஆகிய 10 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளது.விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்குரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் இசிஎஸ் மூலம் செலுத்தப்படும். எனவே, மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளும் நுகர்பொருள் வாணிப கழகத்ததால் செயல்படுத்தப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்து பயன்பெறலாம். நெல் கொள்முதல் தொடர்பாக விபரங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகத்தை 04562-252607 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார்.

Tags : opening ,Collector ,paddy procurement center ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...