×

முஷ்ணம் வட்டத்தில் சார்-ஆட்சியர் ஆய்வு

முஷ்ணம், ஜன. 22: முஷ்ணம் வட்டத்திற்கு உட்பட்ட நங்குடி, தண்டேஸ்வரநல்லூர், கானூர், முடிகண்டநல்லூர், பாளையங்கோட்டை வடக்கு பாளையம், தேத்தாம்பட்டு உள்ளிட்ட பகுதியில் விதவை மற்றும் ஆதரவற்றோர் சான்று கேட்டு ஏற்கனவே சிதம்பரம் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் விண்ணப்பம் செய்து இருந்தனர்.  இதன்படி நேற்று சிதம்பரம் சார்-ஆட்சியர் விசுமகாஜன் வருகை புரிந்து மேற்கண்ட கிராமங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது முஷ்ணம் வருவாய் ஆய்வாளர் கோவிந்தன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags :
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்