×

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி இளையான்குடியில் கடையடைப்பு

இளையான்குடி, ஜன. 22: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரி இளையான்குடியில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கடந்த 3 நாட்களுக்கு முன்பு கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

இந்நிலையில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. இளையான்குடியில் பெட்டிக்கடை, டீக்கடை, ஓட்டல், ஜவுளிக்கடை என 800க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. போராட்டத்தில் வணிகர்கள், வியாபாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர். கடைகள் அடைக்கப்பட்டதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய பஜார், சாலையூர் சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

Tags : store ,revocation ,
× RELATED ஆந்திராவில் குடும்பத்தினர் கண்ணெதிரே...