×

மழை,வெயிலால் பாதிப்பு புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் பொதுமக்கள் வேண்டுகோள்

ஆர்.எஸ்.மங்கலம், ஜன.22:   ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஏ.ஆர்.மங்கலம் விலக்கில் புதிதாக நிழற்குடை அமைத்து தர பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஏ.ஆர்.மங்கலம், விலக்கு ராமேஸ்வரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. ஏ.ஆர்.மங்கலம், கொண்னக்குடி, பகவதி மங்கலம், விளத்தூர்,நடியக்குடி, குமரன் காளி, கள்ளிக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்.எஸ்.மங்கலம்,ராமநாதபுரம், திருவாடானை, தேவகோட்டை, காரைக்குடி போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த ஏ.ஆர்.மங்கலம் பஸ் நிறுத்தத்தையே பயன்படுத்துகின்றனர். இங்கு நிழற்குடை இல்லாமல் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் அவதிப்பட வேண்டிய சூழல் உள்ளது. ஆகையால் உள்ளாட்சி நிர்வாகம் ஒரு நிழற்குடையை கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியது, ‘நாங்கள் எங்களது கிராமங்களில் இருந்து எந்த பொருள்கள் வாங்க வேண்டும் என்றாலும் டவுன் பகுதிகளான ஆர்.எஸ்.மங்கலமோ அல்லது திருவாடானை தான் போக வேண்டும். இந்த சூழ்நிலையில் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் வயதானவர்களும் குழந்தைகளும் மழை, வெயிலில் நிற்கிறோம். இது பொதுமக்கள் மிகவும் சிரமப்படும் நிலையாக உள்ளது. இதனால் மிகவும் கஷ்டமாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடன் எங்கள் பேருந்து நிறுத்தத்தில் புதிய நிழற்குடை கட்டித்தர முன்வர வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை