மயங்கி விழுந்து முதியவர் சாவு

மதுரை, ஜன.22: மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையத்தில் 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்த விபரம் தெரியவில்லை. அவரது இடது காலில் சுண்டு விரல் இல்லை. இது குறித்து துப்புரவு ஆய்வாளர் கண்ணன், அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதுபோல ரயில்நிலைய கிழக்கு நுழைவு வாயிலில் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிக்கிடந்தார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்து போனார். அவர் யார் எந்த ஊரை ேசர்ந்தவர் என திலகர்திடல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: