×

பெண்ணிடம் நகை பறிப்பு

மதுரை, ஜன.22: மதுரையில் டூவீலரில் ெசன்ற பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் ேதடி வருகின்றனர். மதுரை உத்தங்குடி வளர்நகர் மெயின்ரோட்டை சேர்ந்த நாகலிங்கம் மகள் சுசீலா. இவர் இரவில் மார்க்கெட்டுக்கு சென்று விட்டு, டூவீலரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மற்றொரு டூவீலரில் அவரை பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள், சுசீலா அணிந்திருந்த 8 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர். இது குறித்து கே.புதூர் காவல்நிலையத்தில் சுசீலா புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை