தனியார் ஊழியர் போக்சோவில் கைது

திருமங்கலம், ஜன.22: திருமங்கலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

திருமங்கலம் அடுத்துள்ள சமத்துவபுரத்தை சேர்ந்தவர் ஜெயபால் மகன் சிலம்பரசன் (24). தனியார் செல்போன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

கட்ராம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு இவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரில் திருமங்கலம் மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர்.

Related Stories: