தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் பரபரப்பு

திருப்பரங்குன்றம், ஜன.22: திருப்பரங்குன்றம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் மரக்கம்புகள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை-நாகர்கோவில் இடையே இரட்டை அகல ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ரயில் தண்டவாளத்தின் ஓரத்தில் மூங்கில் மற்றும் சவுக்கு கம்புகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் அருகில் இந்த மரத்தினாலான தடுப்பு வேலிகளை மர்ம நபர்கள் உடைத்துவிட்டனர். இதனால் தடுப்பு வேலிகள் ரயில் தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பரங்குன்றம் போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மரக்கம்புகளை அகற்றினர். மேலும் தடுப்பு வேலிகளை தண்டவாளத்தில் சாய்த்தது யார், இதில் ஏதேனும் சதி வேலை உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தண்டவாளத்தில் வேலி தடுப்புகள் விழுந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: