ஹெல்மெட் போடுங்க பாஸ் யானை விழிப்புணர்வு ஊர்வலம்

பேரையூர், ஜன.22: பேரையூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு வாரவிழா நடைபெற்றது. பேரையூர் டி.எஸ்.பி. மதியழகன், பேரையூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணன், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெள்ளைப்பாண்டி தலைமை வகித்தனர். பேரையூர் பைபாஸ் சாலை, தாலுகா அலுவலகம் வழியாக, முக்குச்சாலை, உசிலம்பட்டி சாலை, பேருந்துநிலையம், மறவர்சாவடி, பட்டயத்துமுக்கு, பெருமாள்கோவில்வீதி, அரண்மனைவீதி, தெற்கு முஸ்லீம்தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் யானையுடன் பேரணியாக சென்றனர். வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் போலீசார் துண்டுபிரசுரங்களை வழங்கினர். காவல்துறையினருடன் இணைந்து பேரையூர் சந்தன அரிமா சங்க தலைவர் சுப்புராஜ், செயலாளர் கவிஞர் முருகன், பொருளாளர் பாலமுருகன், ஓட்டுனர் பயிற்சி பள்ளி சிவாஜி மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: