ஒட்டன்சத்திரம் அக்சயா பள்ளியில் ஆண்டு விழா

ஒட்டன்சத்திரம், ஜன. 22: ஒட்டன்சத்திரம் அக்சயா அகாடமி சிபிஎஸ்ஐ மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் புருஷோத்தமன் தலைமை வகிக்க, தாளாளர் சுந்தரம்மாள், செயலர் பட்டாபிராமன் முன்னிலை வகித்தனர். முதல்வர் இன்னாசி முத்து வரவேற்றார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பிச்சுமணி, கன்னியாகுமரி நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக சார்பு வேந்தர் பெருமாள்சாமி ஆகியோர் கிண்டர்கார்டன் வகுப்பு குழந்தைகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினர். தொடர்ந்து மாணவ, மாணவிகள் பங்கேற்ற நடனம், நாடகம், இசை உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில் டிரஸ்டி சாமிநாதன், நிர்வாக அலுவலர் குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: