நத்தம் அருகே அரசு பஸ் மோதி சிறுவன் பலி பலூன் எடுக்க சென்றபோது பரிதாபம்

நத்தம், ஜன. 22: நத்தம் அருகே பலூனை எடுகக் சென்ற போது அரசு பஸ் மோதி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். நத்தம் அருகே குளத்துப்பட்டி கல்லாத்து பாலத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சின்ராஜ் (5). கடந்த பொங்கல் பண்டிகையன்று அப்பகுதியில் விளையாட்டு போட்டிகள் நடந்தது. அப்போது சின்ராஜ் கையில் பலூன் வைத்து விளையாடி கொண்டிருந்தான். பலூன் கீழே விழுந்ததையடுத்து அதை எடுக்க சென்ற தன்ராஜ் மீது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக செந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சின்ராஜ் பரிதாபாக உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: