×

தொழிலாளியை தாக்கிய வாலிபர்கள் 5 பேர் கைது

நெல்லை, ஜன. 22: மானூர் அருகே தொழிலாளியை தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.  நெல்லை அருகே மானூர் அடுத்த  எட்டாங்குளத்தை சேர்ந்த பேச்சிமுத்து மகன் ராஜா (19). கூலி தொழிலாளியான இவர் கடந்த 15ம் தேதி மானூரில் செயல்படும் டாஸ்மாக் கடையில் மது பானம் வாங்கிக்கொண்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். மானூர் விலக்கு பகுதியில் வந்த போது 3 பைக்குகளில் வழிமறித்த மானூரைச் சேர்ந்த ரவிகுமார் மகன் செந்தில்குமார் (22), உய்க்காட்டான் மகன் சபி பாலா (21), சுப்பிரமணியன் மகன் சூர்யா (19), ராமர் மகன் சரத்குமார் (19) மற்றும் எட்டாங்குளத்தை சேர்ந்த ராமதாஸ் மகன் சுப்பிரமணியன் (19) ஆகிய 5 பேரும் ராஜாவிடம் தகராறு செய்தனர். மேலும் அவரை சரமாரியாகத் தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்துச் சென்றனர். இதில் படுகாயமடைந்த ராஜா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த மானூர் போலீசார், தாக்குதல் நடத்திய செந்தில்குமார், சபிபாலா உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.

Tags :
× RELATED டிராக்டர் கலப்பையை திருடிய வாலிபர் கைது