×

குருவிகுளம் அருகே மாயமான பெண் உடல் காட்டுப்பகுதியில் மீட்பு

திருவேங்கடம், ஜன. 22: குருவிகுளம் அருகே மாயமான பெண் உடல் காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே பழங்கோட்டை கீழத்தெருவைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி(60). தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காளியம்மாள்(55), விவசாய கூலி வேலைக்கு செய்துவந்தார். இவர்களது 2 மகள், ஒரு மகன் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.கடந்த 15ம்தேதி பொங்கல் பண்டிகை அன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற காளியம்மாள் வீடு திரும்பவில்லை. மகன், மகள்கள் வீட்டிற்கு சென்று இருக்கலாம் என துரைப்பாண்டி கருதினார். ஆனால் அங்கு அவர் செல்லவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் பழங்கோட்டை காட்டுப்பகுதியில் உடல் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக ஆடு மேய்க்க சென்றவர்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். குருவிகுளம் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் பிணமாக கிடந்தவர் மாயமான காளியம்மாள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவ இடத்தில் மதுபாட்டில்கள் கிடந்தன. இறந்த காளியம்மாளுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாகவும் அளவுக்கு அதிகமாக குடித்ததால் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Kuruvigulam ,
× RELATED குருவிகுளத்தில் திமுக கொடியேற்று விழா