பைக் மீது கார் மோதி டாஸ்மாக் ஊழியர் பலி

அம்பை, ஜன. 22:  கல்லிடைக்குறிச்சி பகழி கூத்தர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (52). அம்பை டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இவரும், அம்பை தீர்த்தபதி பள்ளி ஆசிரியர் சண்முகையாவும் ஆலங்குளத்தில் நடந்த திருமணத்துக்கு பைக்கில் சென்றுவிட்டு இரவு அம்பை திரும்பினர். கோயில்குளம் அருகே வரும்போது எதிரே வந்த கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே கண்ணன் இறந்தார். சண்முகையா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அம்பை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர். பலியான கண்ணனுக்கு வாசுகி (47) என்ற மனைவியும், பருவத (19), நித்ய (16) இரு மகள்கள் உள்ளனர்.

Related Stories: