கிரசண்ட் பள்ளி விளையாட்டு விழா

கடையநல்லூர், ஜன. 22:  கடையநல்லூர் கிரசண்ட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. மாணவ -மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு எஸ்ஐ விஜயகுமார் தலைமை வகித்து மாணவ, மாணவிகளின் கொடி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். விழாவில் வடகரை ஜாய் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி தாளாளர் சாலமோன், கடையநல்லூர் சமூகநல இயக்க தலைவர் சீனா மசூது சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். பள்ளி முதல்வர் ஆண்டனி வரவேற்றார். இதில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் காசிபாண்டியன், உயிரியல் ஆசிரியை பார்வதி ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: