வாகனம் மோதி பெண் பலி

சுரண்டை, ஜன.22:  சேர்ந்தமரம் அருகேயுள்ள வேலப்பநாடாரூரைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி அருள் வான்மதி(22). இவர்களுக்கு கடந்த 2 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு வயதில் ஆண்குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் அருள் வான்மதி கள்ளம்புளி ரோட்டில் உள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு உறவுக்கார பெண்ணுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்.  அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வாகனம் கண்ணிமைக்கும் நேரத்தில் அருள் வான்மதி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேேய அருள்வான்மதி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த சேர்ந்தமரம் போலீசார் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை  தேடி வருகின்றனர்.

Related Stories: