×

கிராமப்புற தமிழ் மன்ற கூட்டம்

நாசரேத், ஜன.22: நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறியில் கிராமப்புற தமிழ்மன்ற கூட்டம் நடந்தது. மன்ற பொறுப்பாளர் தேவதாசன் ஞானராஜ் தலைமை வகித்து வரவேற்றார். தமிழ் பணியாளர் ஆசிரியர் விவின் ஜெயக்குமார், மன்ற உறுப்பினர் ரோஸ்லின் மோசஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கோவை மருத்துவர் அபிராமி கணேஷமூர்த்தி, சுடலைமுத்து, ஆசிரியர் அருள்ராஜ், தமிழ்பணியாளர் மோசஸ் தயான் ஆகியோர் பேசினர். இதில் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். அரிமா விவின் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

Tags : Rural Tamil Forum Meeting ,
× RELATED உளவியல் ஆலோசனை கூட்டம்