உடன்குடி,ஜன.22: உடன்குடி கிறிஸ்தியாநகரம் தூயமாற்கு ஆலய 172வது பிரதிஷ்டை விழா கடந்த 17ம் தேதி மாலை 6 மணிக்கு ஜெபப்பவனியுடன் துவங்கி இரவு 7.30மணிக்கு மிஷனெரி பணித்தள காட்சிகள் நடந்தது. 18ம் தேதி காலை 10 மணிக்கு சேகர உபவாசக் கூடுகை, இரவு 7 மணிக்கு கலைநிகழ்ச்சி, 19ம் தேதி காலை 9 மணிக்கு திருவிருந்து ஆராதனை, இரவு 7 மணிக்கு புத்தக வெளியீடு, பல்சுவை கலைநிகழ்ச்சி நடந்தது. நேற்று (21ம் தேதி) இரவு 7 மணிக்கு நற்செய்தி கூட்டம் நடந்தது. இன்று (22ம் தேதி) நாளை (23ம் தேதி) இரவு 7 மணிக்கு நற்செய்தி கூட்டம் நடைபெறும் விடுதலைப்பெருவிழாவில் நாலுமாவடி அப்பாத்துரை சிறப்பு செய்தியளிக்கிறார். 24ம் தேதி காலை 7 மணிக்கு திருவிருந்து ஆராதனை, தொடர்ந்து மிஷினெரி பணி விற்பனை விழா, நண்பகல் 12 மணிக்கு ஐக்கிய விருந்து, மாலை 6.30 மணிக்கு ஆயத்த ஆராதனை, இரவு 8.30 மணிக்கு ஆண்கள் ஐக்கிய சங்கத்தினரின் விருந்து நடக்கிறது. 25ம் தேதி அதிகாலை 3மணிக்கு குருவானவர் சாமுவேல் தாமஸ் சிறப்பு நற்செய்தியளிக்கிறார்.