×

செய்யாறு அருகே பரபரப்பு விபத்தில் மகன் இறந்த வேதனையில் தாய் தற்கொலை முயற்சி

செய்யாறு, ஜன.22: செய்யாறு அருகே பைக் விபத்தில் மகன் இறந்ததால். வேதனை அடைந்த தாய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். செய்யாறு அடுத்த புளியரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமன். இவரது மகன் மேகநாதன்(38), எலக்ட்ரீஷியன். இவருக்கு அம்பிகா என்ற மனைவியும், திருவரசி என்ற மகள், தமிழ்குமரன், நரேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சென்னையில் பணிபுரிந்து வரும் மேகநாதன், பொங்கல் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 17ம் தேதி மாமியார் வீடான சித்தாத்தூர் கிராமத்திற்கு பைக்கில் தனது நண்பர் செல்வகுமாருடன் சென்றுவிட்டு வீடு திரும்பினார். வளர்புரம் கிராமம் அருகே வரும்போது, குறுக்கே நாய் வந்ததால் நிலை தடுமாறிய 2 பேரும் பைக்கில் இருந்து கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர், மேகநாதன் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மேகநாதன் இறந்தார். தகவலறிந்த அவரது தாய் அஞ்சுலட்சுமி(60), மகன் இறந்த துக்கம் தாளாமல் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : death ,
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு