×

சாரண, சாரணியர் இயக்கம் சார்பில் ராஜ்ய புரஸ்கார் விருது வழங்கும் விழா

திருவண்ணாமலை, ஜன.22: திருவண்ணாமலையில் நேற்று சாரண, சாரணியர் இயக்கம் சார்பில் ராஜ்ய புரஸ்கார் விருது வழங்கும் விழா நடந்தது. திருவண்ணாமலை தியாகி அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று பாரத சாரண, சாரணியர் இயக்கம் சார்பில் 2018ம் ஆண்டிற்கான ராஜ்ய புரஸ்கார் விருது வழங்கும் விழா நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் அருட்செல்வம் முன்னிலை வகித்தார். விழாவில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேசுகையில், `இன்றைய போட்டி நிறைந்த பெரிய உலகில் மாணவர்கள் உள்ளீர்கள். எனவே, அனைத்து பாடங்களையும், பாடத்திட்டங்களையும் நன்றாக புரிந்து படிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையின் வெற்றி என்பது பிளஸ் 2 முடித்த பின்னர் எழுதும் போட்டித்தேர்வுகளில் தான் உள்ளது. அதனால் மாணவர்கள் பள்ளி படிப்பு காலத்தில் இருந்தே போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்தி கொள்ள வேண்டும். நீங்கள் வெற்றி வாய்ப்பை தொடும் வரை கல்வி பயணத்தை தொடர வேண்டும்' என்றார். தொடர்ந்து, பாரத சாரண, சாரணியர் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

Tags : Rajya Praskar Award Ceremony ,Scout ,
× RELATED கூடலூரில் பாரத சாரண சாரணிய இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி