×

ஒக்கியம்பேட்டை தனியார் விடுதியில் ஆந்திரா இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை

* பரபரப்பு கடிதம் சிக்கியது
* நண்பர்கள் 3 பேரிடம் விசாரணை

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் அடுத்த ஒக்கியம்பேட்டை பிள்ளையார் கோயிலில் உள்ள தனியார் ஆண்கள் விடுதியில் தங்கி பணியாற்றி வந்த ஆந்திராவை சேர்ந்த இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றி, நண்பர்கள் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஆந்திரா மாநிலம் மதனபள்ளியை சேர்ந்தவர் முகேஷ்பாபு (26). சோழிங்கநல்லூர் தனியார் கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியர். துரைப்பாக்கம் அடுத்த ஒக்கியம்பேட்டை பிள்ளையார் கோயிலில் உள்ள ஆண்கள் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.  நேற்று காலை இவரது அறைக்கதவு வெகு நேரமாக திறக்கப்படாததால் பக்கத்து அறை மாணவர்கள் கதவை தட்டி பார்த்தனர். திறக்காததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், கதவை உடைத்து பார்த்தபோது, மின் விசிறியில் முகேஷ்பாபு தூக்கிட்டு சடலமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து கண்ணகி நகர் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் முகேஷ்பாபு அறையில் போலீசார் சோதனையிட்டு அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அதில், எனது நண்பர்கள் கணேஷ், விக்னேஷ், கமல் ஆகியோர் கொடுத்த மன உளைச்சலால்தான் தற்கொலை செய்கிறேன்” என கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வேளச்சேரி: பெசன்ட் நகர், ஊரூர் குப்பத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (29). மீன்பிடி தொழில் செய்து வந்தார். நேற்று காலை மீன் பிடிக்க வராததால் அந்த பகுதியை சேர்ந்தவர் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மணிகண்டன் தூக்கில் பிணமாக தொங்கியது தெரிந்தது. தகவலறிந்து சாஸ்திரி நகர் போலீசார் வந்து மணிகண்டன் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. இதனால் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரிந்தது.

Tags : engineer ,Andhra ,suicide ,hotel ,
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...