பெரம்பூர்: வியாசர்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தீ விபத்து தடுப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் தீயை அணைப்பது, காஸ் சிலிண்டர், மின்சாரம், அடுக்குமாடி கட்டிடம், குடிசை வீடுகளில் தீப்பிடித்தால் எப்படி அணைப்பது? என்பது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. வடசென்னை மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் ராஜேஷ் கண்ணா உத்தரவின்பேரில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் உள்ள தனியார் பள்ளியில் தீ விபத்து தடுப்பு குறித்த செயல்முறை விளக்கம் நடைபெற்றது. இதில் தீயணைப்பு நிலைய அதிகாரி அன்பழகன் மேற்பார்வையில் மூத்த அதிகாரிகள் கமலக்கண்ணன், ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தீ விபத்துக்களை தடுப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். தண்டையார்பேட்டை: மண்ணடி சிங்கர் தெருவில் உள்ள தனியார் பள்ளியில் தீ விபத்து தடுப்பு குறித்து மாணவர்களுக்கு ெசய்முறை விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராஜேஷ்கண்ணா தலைமை வகித்தார். உதவி மாவட்ட அலுவலர்கள் ஏழுமலை, பழனி முன்னிலை வகித்தனர்.