சென்னை: மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் ஜானி - ரந்தேஷா தம்பதி. இவர்களது 8 மாத குழந்தை ஜான். மெரினா கடற்கரையில் தங்கி பலூன் வியாபாரம் செய்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு இவர்களிடம் வந்த ஒரு பெண், ‘‘உங்களது குழந்தைக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருகிறேன்’’ என கூறி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து வந்து குழந்தையுடன் மாயமானார். இதுகுறித்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் குழந்தையின் பெற்றோர் புகார் செய்தனர். இந்நிலையில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அந்த பெண்ணை பூக்கடை போலீசார் பிடித்து விசாரித்தனர்.