ரெப்கோ ஹோம் பைனான்ஸ் உடுமலை கிளையில் 24ம் தேதி வீட்டுவசதி கடன் முகாம்

உடுமலைபேட்டை, ஜன.22: ரெப்கோ ஹோம் பைனான்ஸ் உடுமலைபேட்டை கிளையில் வரும் 24ம் தேதி வீட்டுவசதி கடன் முகாம் நடக்கவுள்ளது.

உடுமலைபேட்டை, பழனி மெயின் ரோடு, சுபிட்ஷா காம்ப்ளக்ஸில் உள்ள ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் சார்பில் வீட்டுவசதி கடன் முகாம் வரும் 24ம் தேதி காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில் வீட்டுமனை வாங்க, வீடு கட்ட, வீடு மற்றும் அடுக்குமாடி கட்டிடம் வாங்க, வீடு பழுது பார்க்க, விஸ்தரிக்க, நிலுவையில் உள்ள அதிக வட்டி வீட்டு வசதி கடனை மாற்றி கூடுதல் தொகையை பெற கடன் வசதி அளிக்கப்படுகிறது. இதில் வட்டி விகிதம் 8.75 சதவீதம், சிறப்பு சலுகையாக செயலாக்க கட்டணத்தில் சிறப்பு சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த கடன் முகாமில் கலந்து கொள்ள வருமான சான்றிதழ், மற்றும் கடன் வாங்க இருக்கும் சொத்து விவரங்களுடன் நேரில் வரவேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: