அவிநாசி அருகே சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

அவிநாசி, ஜன. 22: அவிநாசி அருகே பைபாஸ் ரோட்டில் அன்னாசி பழம் லோடு ஏற்றி வந்த சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.கேரளா மாநிலம் வெள்ளாச்சேரியில் இருந்து அன்னாசி (பைனாப்பிள்) பழங்களை லோடு ஏற்றிக் கொண்டு சரக்குலாரி ஒன்று, ஆந்திரா மாநிலம் அனந்தப்பூரை நோக்கி நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அவிநாசி அருகே மங்கலம் ரோடு சந்திப்பில் உள்ள ஆறுவழிச்சாலை மேம்பாலம் அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து லாரி, பாலத்தின் தடுப்புச் சுவரின் மீது மோதி வலது புறமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், லாரியின் டிரைவர் தேனி சிலம்பரசன் (33), உதவி டிரைவர் மனோஜ்குமார் (27) ஆகிய இருவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். இவர்கள் இருவரும் சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள அன்னாசிப்பழங்கள் ரோட்டில் கொட்டி சேதமடைந்தது. லாரி கவிழ்ந்த விபத்தால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து அவிநாசி போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: