×

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி துண்டு பிரசுரம் வினியோகம்

வேலூர், ஜன.22: வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. 31வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி வேலூர் நெடுஞ்சாலை கோட்டம் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரம் நேற்று வினியோகம் செய்யப்பட்டது. வேலூர் கோட்டப்பொறியாளர் சரவணன் உத்தரவின் பேரில் உதவி கோட்ட பொறியாளர் அண்ணாமலை மற்றும் வேலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர். அப்போது, பைக்கில் ஹெல்மேட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் ஹெல்மேட் அணிவதன் அவசியம் குறித்து அறிவுரை வழங்கினர். மேலும் நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையோரங்களில் கிணறு உள்ள பகுதிகளில் தடுப்பு சுவர் மற்றும் விபத்துகளை குறைக்கும் சாலையில் ஆங்காங்கே வேகத்தடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Road Safety Weekend ,Vellore New Bus Stand ,
× RELATED தேசிய சாலை பாதுகாப்பு வார விழா...