அ.ம.மு.க. பொதுக்கூட்டம்

தாராபுரம், ஜன. 22:  தாராபுரம் அ.ம.முக ஒன்றிய கழகம் சார்பில் எம்.ஜி.ஆரின் 103வது பிறந்தநாள் விழா, பொதுக்கூட்டம் தாராபுரம் காளிபாளையத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் சண்முகவேல் தலைமையில் தாராபுரம் பஸ் ஸ்டாப் அருகே நடந்தது. இப்பொதுக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 20க்கும் மேற்பட்டோர் அ.ம.மு.க.வில் இணைத்தனர். இந்த பொதுக்கூட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் புறநகர் மாவட்ட கழக அமைப்புச் செயலாளர் சண்முகம், கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் தம்பி இஸ்மாயில், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ராஜேந்திரன், தாராபுரம் நகர கழகச் செயலாளர் வாரணவாசை, குளத்துப்பாளையம் பேரூர் கழக செயலாளர் சக்திவேல், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் மூர்த்தி, மூலனூர் ஒன்றிய செயலாளர் வேலுமணி, குண்டடம் ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, பேரூர் கழக செயலாளர்கள் குப்புசாமி, குமார், சீரங்கராயன், ராஜகோபால், தலைமை கழக பேச்சாளர் தேனி கவிதாகுமார், தலைமை கழக பேச்சாளர் ராஜகோபால், மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் தாரா சபி, உள்ளிட்ட நகர ஒன்றிய பேரூர் கழக கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: