காங்கயம், ஜன. 22: சிவன்மலை சுப்ரமணியசாமி கோயில் தைப்பூச தேர்த்திருவிழாவையொட்டி ஆலோசனைக் கூட்டம் நேற்று கோயில் மண்டப அரங்கில் நடந்தது. சிவன்மலை சுப்ரமணியசாமி கோயில் தைப்பூச தேர்த்திருவிழா ஜன.30 முதல் பிப். 17ம் தேதி வரை நடக்க உள்ளது. தேர்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் பிப்.8,9,10 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் நேற்று மலைமீதுள்ள மண்டப கூட்ட அரங்கில் நடந்தது. தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார் தலைமை தாங்கினார். காங்கயம் தாசில்தார் புனிதவதி, கோயில் செயல் அலுவலரும் உதவி ஆணையருமான கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தேரோட்டம் நடைபெறும் நாட்களில் கிரிவலப்பாதை மற்றும் பக்தர்கள் கூடும் இடங்களில் சுகாதாராம் பேன கூடுதல் பணியாட்களை நியமிப்பது, பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கிரிவலப்பாதை மற்றும் சுற்றுப்பகுதியில் 100 சி.சி.டி.வி கேமராக்களை பொருத்துவது, 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது.