அவிநாசி, ஜன. 22: திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி உற்பத்தியாளர் சம்மேளனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் நடக்கும் ஏலத்திற்கு தென்னை மற்றும் பனங்கருப்பட்டிகளை விவசாயிகள் கொண்டு வருவது வழக்கம்.
இதன்படி, நேற்று நடந்த ஏலத்துக்கு 4 ஆயிரம் கிலோ தென்னங்கருப்பட்டியை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். பனங்கருப்புகட்டி வரத்து இல்லை.
தென்னங்கருப்பட்டி ஒரு கிலோ ரூ.148.50 வீதம், ஏலம் நடைபெற்றது. இதில் மொத்தம் ரூ.5 லட்சத்து 94 ஆயிரத்துக்கு தென்னங்கருப்பட்டி ஏலம் போனது. இந்த தகவலை கூட்டுறவு விற்பனை சம்மேளன மேலாண்மை இயக்குனர் மருதமுத்து, தலைவர் பொன்னுசாமி, துணைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.