×

மஞ்சூர் காவல்நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

மஞ்சூர், ஜன.22:மஞ்சூரில் காவல்துறை  சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப் பட்டது. மஞ்சூர் காவல்  நிலையத்தின் சார்பில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மஞ்சூர் இன்ஸ்பெக்டர் தவுலத்நிஷா  துவக்கி வைத்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், ரவி, சுப்ரமணி, மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரவிக்குமார், நாட்டுநலப்பணி திட்ட  மாவட்ட தொடர்பு அலுவலர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் போலீசார் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

மேல்பஜாரில் துவங்கிய பேரணி பஸ்நிலையம், மணிக்கல் மட்டம் வழியாக கொட்டரகண்டி வரை சென்று திரும்பியது. இதில் சாலை விதிகள் குறித்தும், பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது, இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போது கட்டாயம் ஹெல்மெட் அனிந்து செல்வது, 18 வயது பூர்த்தியடைந்த பின்னரே வாகனங்களை இயக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பியும் பொதுமக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags : police station ,Manjur ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...