கோவை, ஜன. 21: கோவை மருதமலை சாலை அருகே பாப்பநாயக்கன்புதூரில் உள்ள மடத்தூர் அங்கன்வாடி சத்துணவு கூடத்தை சீரமைத்து தரக்கோரி மாவட்ட கலெக்டர் ராஜாமணியிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் கூறியிருப்பதாவது: கோவை பாப்பநாயக்கன்புதூரில் உள்ள மடத்தூர் அங்கன்வாடி சத்துணவுக் கூடத்தில் சுவர்கள் விரிசல் அடைந்துள்ளது. மேலும் மேற்கூரை ஓட்டையாக இருப்பதால் மழைக்காலங்களில் பள்ளிக்குள் மழைநீர் வருகிறது. இதனால் சுவர்களில் விரிசல் உள்ள கட்டிடம் எந்நேரமும் இடிந்து விழும் சூழ்நிலை உள்ளது.