கோவை,ஜன.22: கோவை அருகே சின்னதடாகம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட 4 அடி நீளமுள்ள உடும்பு வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது. கோவை மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை சுமார் 694 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. மலைத்தொடர் மற்றும் அதனையொட்டி பகுதியில் கோவை, போளுவாம்பட்டி, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை என 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி, கழுதைப்புலி, மான், மலபார் அணில், உடும்பு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அவ்வப்போது வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலையடிவார கிராமங்களுக்குள் வருவது தொடர் நிகழ்வாக உள்ளது.