கோவை,ஜன.21: பெரியார் குறித்து அவதூறு கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்ற நடிகர் ரஜினிகாந்தின் பேச்சு திமிர் தனமானது. கருத்தை திரும்ப பெறாவிட்டால் அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் தெரிவித்தார். சென்னை செல்வதற்காக தமிழ்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் நேற்று கோவை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- இந்தியாவிலேயே முதன்முதலாக 350 அடி உயரத்தில் அம்பேத்கருக்கு சிலை அமைக்க உத்தரவிட்டுள்ள மகாராஷ்டிரா அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பெரியாரை பற்றி ரஜினிகாந்த் அவதூறாக பேசி இருப்பது கண்டனத்திற்குரியது. அவதூறு கருத்தை பரப்பிய அவர் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்யவேண்டும்.