ஈரோடு ரயில் நிலையத்தில் சிறுவன், சிறுமி மீட்பு

ஈரோடு, ஜன.22: ஈரோடு ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த சிறுவன், சிறுமியை ரயில்வே போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

ஈரோடு ரயில்வே போலீசார் நேற்று முன்தினம் பிளாட்பார்ம் 1ல் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ஒரு சிறுமி சுற்றித்திரிந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது ஈரோடு புதுகாலனி பகுதியை சேர்ந்த ராஜ் மகள் பாலமணி (16) என்பதும், இவர் தனது தோழியை தேடி ஈரோடு ரயில் நிலையம் வந்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.  இதேபோல், ஈரோடு ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (16) என்ற சிறுவனையும் ரயில்வே போலீசார் மீட்டு அவரது தாயிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: