டெய்லர் கடைக்கு சென்ற தாய், மகள் மாயம்

பவானி, ஜன.22:சித்தோடு அருகே உள்ள பெருமாள்மலை, விளையாட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (35). பெயிண்டர். இவரது மனைவி சித்ரா (32). இவர்களது மகள் சஞ்சனா (14). சித்ரா, சஞ்சனா இருவரும் கடந்த 14ம் தேதி ஈரோட்டுக்கு துணி தைப்பதற்காக அளவு கொடுக்க சென்றனர். ஆனால், நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சித்ராவின் கணவர் வேலுச்சாமி சித்தோடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து தாய், மகள் இருவரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: