ஈரோடு, ஜன.22: ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் வகையறா கோயில்களில் கடந்தாண்டு பக்தர்களுக்கு 45 ஆயிரம் துணிப்பைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களுக்கு தடை விதித்தது. இதைத்தொடர்ந்து, அறநிலையத்துறை சார்பில் கோயில்களுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் கவர்களில் பூஜை பொருட்கள் கொண்டு வந்தால் அவை பறிமுதல் செய்யப்பட்டது. இதில், ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில் மற்றும் அதன் வகையறா கோயில்களில் பிளாஸ்டிக் பைகளை கொண்டு வருவோருரிடம் அதை பெற்றுக் கொண்டு இலசவமாக துணிப்பைகள் வழங்கப்பட்டது.