சத்தியமங்கலம், ஜன.22: தாளவாடி அருகே யானை தாக்கி விவசாயி காயம் அடைந்தார். தாளவாடி அருகே உள்ள அஞ்செட்டிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வீரேந்திரன்(48). இவர், தனது தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். கடந்த வாரம் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோள கதிர்களில் இருந்து தானியம் பிரித்தெடுக்கப்பட்டு தனது நிலத்தில் காய வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வீரேந்திரன், நேற்றுமுன்தினம் மக்காசோளத்தை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக தனது நிலத்தில் அமைக்கப்பட்ட குடியில் காவல் இருந்தார்.