ஈரோடு, ஜன.22: ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் மைனர் சிறுமிகளை துன்புறுத்தியது தொடர்பாக 209 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி சக்தி கணேசன் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க ‘லேடீஸ் பர்ஸ்ட் திட்டம்’ கடந்த ஆண்டு மே மாதம் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்காக, 96552 20100 என்ற செல்போன் எண் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், கடந்தாண்டில் 1,500 அழைப்புகள் வந்தது. அதில், அனைத்து அழைப்புகளுக்கும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 1,450 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள வழக்குகள் விசாரணையில் உள்ளன. அதேபோல், கடந்தாண்டு மாவட்டத்தில் பெண்களை துன்புறுத்தியது தொடர்பாக 139 வழக்குகளும், மைனர் பெண் மற்றும் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக 70 போக்சோ வழக்குகள் என 209 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.